பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் 1,236 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஒண்டிப்புதூர் தெரு நாய்களுக்கான கருத்தடை மையம் நடப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கி செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை 145 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மூலமாக, நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் 101 தெரு நாய்களுக்கும், மார்ச் மாதத்தில் 154 தெரு நாய்களுக்கும், ஏப்ரல் மாதத்தில் 140 தெரு நாய்களுக்கும், மே மாதத்தில் 146 தெரு நாய்களுக்கும், ஜூன் மாதத்தில் 144 தெரு நாய்களுக்கும், ஜூலை மாதத்தில் 119 தெரு நாய்களுக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 127 தெரு நாய்களுக்கும், செப்டம்பர் மாதத்தில் 153 தெரு நாய்களுக்கும், அக்டோபர் மாதத்தில் 152 தெரு நாய்களுக்கும் என மொத்தமாக 1236 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக நாய்களுக்குக் கருத்தடை பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு உரிய கட்டணத்தை மாநகராட்சி வழங்குகிறது' என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஒண்டிப்புதூர் தெரு நாய்களுக்கான கருத்தடை மையம் நடப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கி செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை 145 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மூலமாக, நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் 101 தெரு நாய்களுக்கும், மார்ச் மாதத்தில் 154 தெரு நாய்களுக்கும், ஏப்ரல் மாதத்தில் 140 தெரு நாய்களுக்கும், மே மாதத்தில் 146 தெரு நாய்களுக்கும், ஜூன் மாதத்தில் 144 தெரு நாய்களுக்கும், ஜூலை மாதத்தில் 119 தெரு நாய்களுக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 127 தெரு நாய்களுக்கும், செப்டம்பர் மாதத்தில் 153 தெரு நாய்களுக்கும், அக்டோபர் மாதத்தில் 152 தெரு நாய்களுக்கும் என மொத்தமாக 1236 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக நாய்களுக்குக் கருத்தடை பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு உரிய கட்டணத்தை மாநகராட்சி வழங்குகிறது' என்று தெரிவித்தார்.