நவம்பர் 1ம் தேதி முதல் மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவ., 1ம் தேதி முதல் மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடும்ப அட்டைதாரர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவ., 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை காலை, 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை ரேஷன் கடைகளை திறந்து பொதுவினியோக திட்டம் மற்றும் சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை வழங்க தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில், இத்தேதிகளில், இந்த நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் மட்டும், இந்த மூன்று நாட்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் கட்டாயம் இல்லை.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை பெறாதவர்கள், வழக்கம்போல் பண்டிகை காலம் முடிந்து, 8ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம். அத்தியாவசிய பொருட்கள் பெற விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்து, ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடும்ப அட்டைதாரர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவ., 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை காலை, 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை ரேஷன் கடைகளை திறந்து பொதுவினியோக திட்டம் மற்றும் சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை வழங்க தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில், இத்தேதிகளில், இந்த நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் மட்டும், இந்த மூன்று நாட்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் கட்டாயம் இல்லை.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை பெறாதவர்கள், வழக்கம்போல் பண்டிகை காலம் முடிந்து, 8ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம். அத்தியாவசிய பொருட்கள் பெற விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்து, ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.