கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திலுள்ள மாநகராட்சி பள்ளிகள், நகர்நல மருத்துவமனை, மகளிர் பூங்கா ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திலுள்ள மாநகராட்சி பள்ளிகள், நகர்நல மருத்துவமனை, மகளிர் பூங்கா ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், புலியகுளம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் சுந்தரேசன் லே-அவுட் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், பள்ளியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், மின் வசதி, குடிநீர் வசதி,

கழிப்பறை வசதிகள் ஆகியவற்றைக் குறித்து, பொறியாளர்களிடம் கேட்டறிந்து பள்ளி வளாகம், அங்குள்ள சிறு பூங்காவின் உட்புற பகுதிகள் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்தில் கொசுமருந்து அடித்தும், குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யவேண்டுமெனவும்,

மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் மற்றும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகளில் தற்போது நடைபெற்று வரும் தூய்மைப்பணிகளை விரைவாகச் செய்து முடிக்கவேண்டுமென ஆணையாளர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மத்திய மண்டலத்திலுள்ள நேரு நகர் பகுதியிலுள்ள மகளிர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றைத் தாய்மையாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்திய பின்னர் இராமநாதபுரம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர்,

மருத்துவமனைக்கு நாளொன்றுக்குச் சராசரியாக எவ்வளவு நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள்? சிகிச்சைக்கு வருகை தரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும், மருந்து, மாத்திரைகள், போதுமான இருப்பு உள்ளதா என கேட்டறிந்தார்.

அதன் பின்னர், சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.1.05-கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர்நல மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர்,

73-வது வார்டுக்குட்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அமைந்துள்ள பேருந்து நிலைய சாலையில், உள்ள மழைநீர் வடிகால் பழுதடைந்துள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக பழுதுகளைச் சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர் சுந்தாராஜன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், புலியகுளம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் சுந்தரேசன் லே-அவுட் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், பள்ளியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், மின் வசதி, குடிநீர் வசதி,
கழிப்பறை வசதிகள் ஆகியவற்றைக் குறித்து, பொறியாளர்களிடம் கேட்டறிந்து பள்ளி வளாகம், அங்குள்ள சிறு பூங்காவின் உட்புற பகுதிகள் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்தில் கொசுமருந்து அடித்தும், குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யவேண்டுமெனவும்,
மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் மற்றும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகளில் தற்போது நடைபெற்று வரும் தூய்மைப்பணிகளை விரைவாகச் செய்து முடிக்கவேண்டுமென ஆணையாளர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மத்திய மண்டலத்திலுள்ள நேரு நகர் பகுதியிலுள்ள மகளிர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றைத் தாய்மையாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்திய பின்னர் இராமநாதபுரம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர்,
மருத்துவமனைக்கு நாளொன்றுக்குச் சராசரியாக எவ்வளவு நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள்? சிகிச்சைக்கு வருகை தரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும், மருந்து, மாத்திரைகள், போதுமான இருப்பு உள்ளதா என கேட்டறிந்தார்.
அதன் பின்னர், சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.1.05-கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர்நல மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர்,
73-வது வார்டுக்குட்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அமைந்துள்ள பேருந்து நிலைய சாலையில், உள்ள மழைநீர் வடிகால் பழுதடைந்துள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக பழுதுகளைச் சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர் சுந்தாராஜன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.