திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் நெருப்பெரிச்சல் மற்றும் வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முழு தொகை செலுத்திய 142- பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் நெருப்பெரிச்சல் மற்றும் வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முழு தொகை செலுத்திய 142- பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் நெருப்பெரிச்சல் மற்றும் வீரபாண்டி பகுதியில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.
இதில் வீடு இல்லா ஏழைகளுக்கும் நீர்நிலைப் பகுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக நெருப்பெரிச்சல் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45-திருநங்கைகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெருப்பெரிச்சல் மற்றும் வீரபாண்டி பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கான முழு தொகை கட்டிய பயனாளிகளுக்கு வீடுகளை குலுக்கல் முறையில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில், நடந்த நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குலுக்கல் மூலம் வீடு வழங்கும் நிகழ்வில் 142- பயனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வீட்டை தேர்வு செய்தனர்.