இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் சக்தி சரண்யா கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளிகள் திறப்பது குறித்து கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வீதியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் சக்தி சரண்யா கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் சுழற்சி முறையில் நடத்தப்படும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும், சத்தான, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் கூறப்பட்டது.