கோவை கிணத்துக்கடவு அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்..!

இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் சக்தி சரண்யா கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.



கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, பள்ளிகள் திறப்பது குறித்து கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வீதியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். 

இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் சக்தி சரண்யா கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். 

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் சுழற்சி முறையில் நடத்தப்படும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும், சத்தான, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் கூறப்பட்டது. 

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...