கிணத்துக்கடவில் மின்கம்பத்தில் தூக்குப் போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை.!!

கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் மின்கம்பத்தில் தூக்குப் போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் மின்கம்பத்தில் தூக்குப் போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கபிராஜ்(20) என்ற நபர் நேற்று காலை தொழிற்சாலையை விட்டு வெளியே சென்றவர். திரும்பாததால் தொழிற்சாலையில் பணியாற்றிய சக தொழிலாளர்கள் கபிராஜை தேடி வந்துள்ளனர்.

அப்போது தொழிற்சாலையில் பின்புறம் பகுதியிலுள்ள மின்கம்பத்தில் கபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் கபிராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...