கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் மின்கம்பத்தில் தூக்குப் போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் மின்கம்பத்தில் தூக்குப் போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கபிராஜ்(20) என்ற நபர் நேற்று காலை தொழிற்சாலையை விட்டு வெளியே சென்றவர். திரும்பாததால் தொழிற்சாலையில் பணியாற்றிய சக தொழிலாளர்கள் கபிராஜை தேடி வந்துள்ளனர்.
அப்போது தொழிற்சாலையில் பின்புறம் பகுதியிலுள்ள மின்கம்பத்தில் கபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் கபிராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.