கோவை தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை யானை தாக்கி முதியவர் பலி; யானை நடமாட்டம் உள்ளதால் உடலை மீட்பதில் தாமதம்...!

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் பகுதியை சேர்ந்த 80 வயதான ஆதிவாசி ஒருவர் காளான் பறிக்க சென்ற போது ஒற்றை யானை மிதித்து பலி. மழையால், உடலை மீட்க்கும் பணியில் தொய்வு.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் ஆதிவாசிகள் பகுதியை சேர்ந்த 4 பேர் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் காளான் அதிக அளவில் காணப்பட்டதால் தினந்தோறும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று காளான் பறித்து வந்தனர். 

இந்நிலையில் வழக்கம் போல் இன்று அதிகாலை அடர்ந்த வனப் பகுதிக்குள் முட்புதர்கள் அதிகம் உள்ள பகுதியில், காளான் பறிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள புதருக்குள் மறைந்து இருந்த ஒற்றை காட்டு யானையை பார்த்து அலறியடித்து ஓட தொடங்கினர். இதில், 80 வயது வெள்ளியங்கிரி என்பவர் யானையிடம் சிக்கிக் கொண்டார். 

80 வயதான வெள்ளியங்கிரியை யானை துதிக்கையால் தூக்கி அடித்து கொன்றதாக உடன் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தொடர் மழை மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ளதால், உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் மாலை நேரம் என்பதால் வெளிச்சமின்மை மற்றும் அட்டுக்கல் வனப்பகுதியில் மழை பெய்து வருவதால், நாளை காலை தான் இறந்த முதியவரின் உடலை எடுக்கும் பணி நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...