கிணத்துக்கடவு TELC-பள்ளி முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில், இருசக்கரம் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி கிழேவிழுந்த வேன் ஓட்டுநர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கிணத்துக்கடவு TELC-பள்ளி முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில், இருசக்கரம் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி கிழேவிழுந்த வேன் ஓட்டுநர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாலாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் வயது (53) கூலிவேலை செய்து வரும் இவருக்கு, பேபி (51) என்ற மனைவியும் கலைச்செல்வி என்ற மகளும், சிவக்குமார் (21) கெளரிசங்கர் (17) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வேன் ஓட்டுநரான சிவகுமார் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் தனது தாத்தா நடராஜை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காணியாலாம் பாளைத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது சர்வீஸ் சாலையில் நடுவே ஏற்பட்டிருந்த பள்ளத்தில் இருசக்கரம் வாகனம் இறங்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவகுமாருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடினார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிவகுமாருக்கு முதலுதவி சிகிச்சையளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிவகுமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாலாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் வயது (53) கூலிவேலை செய்து வரும் இவருக்கு, பேபி (51) என்ற மனைவியும் கலைச்செல்வி என்ற மகளும், சிவக்குமார் (21) கெளரிசங்கர் (17) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வேன் ஓட்டுநரான சிவகுமார் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் தனது தாத்தா நடராஜை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காணியாலாம் பாளைத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது சர்வீஸ் சாலையில் நடுவே ஏற்பட்டிருந்த பள்ளத்தில் இருசக்கரம் வாகனம் இறங்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவகுமாருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடினார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிவகுமாருக்கு முதலுதவி சிகிச்சையளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிவகுமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.