கிணத்துக்கடவில் சாலையிலிருந்த பள்ளத்தில் நிலைத்தடுமாறி விழுந்த வேன் ஓட்டுநர் பலி.!!

கிணத்துக்கடவு TELC-பள்ளி முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில், இருசக்கரம் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி கிழேவிழுந்த வேன் ஓட்டுநர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: கிணத்துக்கடவு TELC-பள்ளி முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில், இருசக்கரம் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி கிழேவிழுந்த வேன் ஓட்டுநர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாலாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் வயது (53) கூலிவேலை செய்து வரும் இவருக்கு, பேபி (51) என்ற மனைவியும் கலைச்செல்வி என்ற மகளும், சிவக்குமார் (21) கெளரிசங்கர் (17) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வேன் ஓட்டுநரான சிவகுமார் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் தனது தாத்தா நடராஜை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காணியாலாம் பாளைத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது சர்வீஸ் சாலையில் நடுவே ஏற்பட்டிருந்த பள்ளத்தில் இருசக்கரம் வாகனம் இறங்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவகுமாருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடினார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிவகுமாருக்கு முதலுதவி சிகிச்சையளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிவகுமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...