வட்ட சட்டப் பணிகள் குழுத்தலைவர் நீதிபதி பாலமுருகன் தலைமையில் நடந்த இந்த முகாமில், நீதிபதிகள் ஆனந்தி, செல்லையா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை: பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25வது வெள்ளி விழா ஆண்டை ஒட்டி பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ரோட்டரி ராயல்ஸ் சங்கம் ஆகியன இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின.

வட்ட சட்டப் பணிகள் குழுத்தலைவர் நீதிபதி பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், நீதிபதிகள் ஆனந்தி, செல்லையா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இறுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.