கோவை நொய்யல் ஆற்று மேட்டில் தங்கமண் இருப்பதாக ஆற்றில் குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கோவையில் தங்கமண் எடுக்க ஆற்றில் குதித்த இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த குணா என்பவரது மகன் வல்லரசு (22) இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வல்லரசின் நண்பர் சேகர் என்பவரும், கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருந்து கோணவாய்க்கால் பாளையம் செல்லும் நொய்யல் ஆற்றுமேடு வழியாக இருசக்கர வாகனத்தில் நேற்றுமாலை சென்றுள்ளனர்.
கிடைக்கும் கூலிவேலை செய்துவரும் வல்லரசு நொய்யலாற்றில் வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் கழிவுநீர் இந்த நொய்யலாற்றில் கலந்து வருவதால், தங்கம் கலந்த மண் கிடைக்கும் என்று நண்பர் சேகரிடம் தெரிவித்து விட்டு ஆற்றில் குதித்துள்ளார்.
இதில் புதர் மண்டிகிடந்த சேற்றில் சிக்கிய வல்லரசை மீட்க முடியாமல், சேகர் கூச்சலிட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போதிய வெளிச்சம் இல்லாததால் வல்லரசு உடலை மீட்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலையில் மீண்டும் மீட்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றில் உள்ள புதர் சேற்றில் சிக்கிய வல்லரசின் உடலை சடலமாக மீட்டனர்.
பின்னர், உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கமண் எடுக்க ஆற்றில் குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த குணா என்பவரது மகன் வல்லரசு (22) இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வல்லரசின் நண்பர் சேகர் என்பவரும், கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருந்து கோணவாய்க்கால் பாளையம் செல்லும் நொய்யல் ஆற்றுமேடு வழியாக இருசக்கர வாகனத்தில் நேற்றுமாலை சென்றுள்ளனர்.
கிடைக்கும் கூலிவேலை செய்துவரும் வல்லரசு நொய்யலாற்றில் வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் கழிவுநீர் இந்த நொய்யலாற்றில் கலந்து வருவதால், தங்கம் கலந்த மண் கிடைக்கும் என்று நண்பர் சேகரிடம் தெரிவித்து விட்டு ஆற்றில் குதித்துள்ளார்.
இதில் புதர் மண்டிகிடந்த சேற்றில் சிக்கிய வல்லரசை மீட்க முடியாமல், சேகர் கூச்சலிட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போதிய வெளிச்சம் இல்லாததால் வல்லரசு உடலை மீட்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலையில் மீண்டும் மீட்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றில் உள்ள புதர் சேற்றில் சிக்கிய வல்லரசின் உடலை சடலமாக மீட்டனர்.
பின்னர், உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கமண் எடுக்க ஆற்றில் குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.