சாலை ஓரங்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக இடையூறின்றி போக்குவரத்து நடைபெற பல்வேறு சாலைகள் நெடுஞ்சாலை துறையினரால் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல, வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக பல்வேறு இடங்களில் காட்டேஜ்கள் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிடப் பணிகள் நடைபெறும் இடங்களில் தோண்டப்படும் மண் கற்கள் மற்றும் பல்வேறு கட்டிட கழிவுகள் வால்பாறை நகரில் வெளிப்புறங்களில் உள்ள சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனிடையே, வால்பாறையில் இருந்து சின்னக்கல்லாறு செல்லும் சின்கோனா சாலை பெரும்பகுதி விரிவாக்கப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில், வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் நடைபெறும் கட்டிட பகுதியில் கிடைக்கும் கட்டிட கழிவுகள் டிப்பர் லாரிகள் மூலம் வால்பாறை சின்னக்கல்லாறு சாலையிலுள்ள கூலாங்கல் ஆற்றை ஒட்டியுள்ள பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இப்படி கொட்டப்படும் கட்டிட கழிவுகள் சில இடங்களில் பாதி சாலைகளை மறைத்து உள்ளன.
சிறுகுன்றா தேயிலைத் தோட்ட இடைச்சோலை அருகே உள்ள வளைவில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள் சாலையின் நடுப்பகுதிவரை சாலையை ஆக்கிரமித்து உள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்த மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் நடைப்பயிற்சி செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, நெடுஞ்சாலை துறையினர் இந்த கட்டிட கழிவுகளை அகற்றவும் சாலை ஓரங்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேபோல, வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக பல்வேறு இடங்களில் காட்டேஜ்கள் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிடப் பணிகள் நடைபெறும் இடங்களில் தோண்டப்படும் மண் கற்கள் மற்றும் பல்வேறு கட்டிட கழிவுகள் வால்பாறை நகரில் வெளிப்புறங்களில் உள்ள சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனிடையே, வால்பாறையில் இருந்து சின்னக்கல்லாறு செல்லும் சின்கோனா சாலை பெரும்பகுதி விரிவாக்கப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில், வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் நடைபெறும் கட்டிட பகுதியில் கிடைக்கும் கட்டிட கழிவுகள் டிப்பர் லாரிகள் மூலம் வால்பாறை சின்னக்கல்லாறு சாலையிலுள்ள கூலாங்கல் ஆற்றை ஒட்டியுள்ள பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இப்படி கொட்டப்படும் கட்டிட கழிவுகள் சில இடங்களில் பாதி சாலைகளை மறைத்து உள்ளன.
சிறுகுன்றா தேயிலைத் தோட்ட இடைச்சோலை அருகே உள்ள வளைவில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள் சாலையின் நடுப்பகுதிவரை சாலையை ஆக்கிரமித்து உள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்த மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் நடைப்பயிற்சி செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, நெடுஞ்சாலை துறையினர் இந்த கட்டிட கழிவுகளை அகற்றவும் சாலை ஓரங்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.