மனைவியை பிரிந்து வாழும் கணவன், குழந்தைகளை பார்க்கச் சென்ற போது அவரை சரமாரியாக தாக்கிய மனைவி குடும்பத்தார்..!

மனைவி வீட்டிற்கு குழந்தைகளை பார்க்க சென்ற கனவனை அடித்து உதைத்த மாமனார் குடும்பத்தினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: குழந்தைகளை பார்க்க சென்ற தந்தையை அடித்து உதைத்த மாமனார் குடும்பத்தினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் தர்மதுரை (30). ஃபிட்னஸ் பயிற்சியாளரான இவருக்கும் போத்தனூர் ஸ்ரீ சத்ய சாய் நகர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் மகள் ஹேசல் ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

ஹேசல் ஜேம்ஸ் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் தர்மதுரையிடம் தங்கள் மதத்திற்கு மாறும்படி பலமுறை கூறி வந்துள்ளனர்.

ஆனால் தர்மதுரை மதம் மாறாமல் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தனது கணவரை பிரிந்து சென்று குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும் விவாகரத்து கேட்டு ஹேசல் ஜேம்ஸ் தனது கணவர் தர்மதுரைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திருமண நாள் என்பதால் தர்மதுரை தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக மனைவி வீட்டிற்கு சென்றார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் வேலைக்குச் சென்று இருந்தார்.

மேலும் அங்கிருந்த ஹேசல் ஜேம்ஸின் தந்தை ஜேம்ஸ் மற்றும் சகோதரர் விவின் மற்றும் அவரது மனைவி ஹன்னா மரியா உட்பட குடும்பத்தார் தர்மதுரை குழந்தையைப் பார்க்க அனுமதிக்காமல் தகராற்றில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றிய நிலையில் தர்மதுரையை உருட்டுக் கட்டையால் அடித்து உதைத்தனர். இதில் தர்மதுரை தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தர்மதுரை அணிந்திருந்த நாலரை பவுன் தங்க செயின், வாட்ச் மற்றும் செல்போனை ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் பறித்து வைத்துக்கொண்டனர்.

காயமடைந்த தர்மதுரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து தர்மதுரை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மதுரையின் மாமனார் ஜேம்ஸ் மற்றும் ஹேசல் ஜேம்ஸின் சகோதரர் விபின் மற்றும் அவரது மனைவி ஹன்னா மரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...