கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை உட்பட 4-பேருக்கு டெங்குகாய்ச்சல்.!!

கோவையில் டெங்குவிற்கு ஒரு குழந்தை உள்பட 4-பேர், மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 80-பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் குழந்தை உட்பட 4-பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நகர் மற்றும் ஊரக பகுதிகளில் பாதிப்பு இருந்து வருகிறது. இதுதவிர மலேரியா, வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவுக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதில் சிலருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பிற்கான அறிகுறி தென்படுகிறது.

இதுபோன்ற நபர்களுக்கு டெங்கு டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதில் காய்ச்சல் என கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த ஒரு குழந்தை உள்பட 4-பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்பினால் வரும் நோயாளிகள் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 81-பேர் டெங்குவிற்கு ஒரு குழந்தை உள்பட 4-பேர், மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 80-பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பருவமழை துவங்கியுள்ளதால், வைரஸ் காய்ச்சல், டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...