கோவையில் தந்தங்கள் வெட்டப்பட்ட ஆண் யானையின் இரண்டு தந்தங்கள் மீட்பு.!!

கோவையில் இறந்த ஆண் யானையின் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களை முட்புதரிலிருந்தது தனிக்குழுவினர் கண்டறிந்து கைப்பற்றினர். யானைத் தந்தம் கைப்பற்றப்பட்ட பகுதி யானை இறந்த பகுதியிலிருந்து சுமார் 430-மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும்.


கோவை: கோவையில் இறந்த ஆண் யானையின் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களை முட்புதரிலிருந்தது தனிக்குழுவினர் கண்டறிந்து கைப்பற்றினர்.

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், வெள்ளப்பதி பிரிவு, பூண்டி தெற்கு சுற்று, கரியன் படுகை சராகப் பகுதியில் 23.10.2021 ம் தேதி போலாம்பட்டி பிளாக் 2 காப்புக்காட்டில் ரோந்து பணியின் போது இறந்த ஆண் யானை ஒன்று முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

இறந்த யானையின் உடலினை காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு இழுத்துச் சென்று இறந்த யானையின் எலும்புகள் மட்டும் அவ்விடத்தில் காணப்பட்டது.

யானை இறந்து சுமார் 40-நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும், இறந்த யானையின் வயது சுமார் 25-30 இருக்கலாம் எனவும், வனக்கால்நடை மருத்துவரின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

யானையின் உடலில் தந்தங்கள் காணப்படவில்லை. ஆதலால் போளுவாம்பட்டி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு 3/2021 பதிவு செய்யப்பட்டு கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர் தலைமையில் 5-தனிக் குழுக்கள் அமைத்து 5- தினங்கள் இரவு பகலாகத் தீவிர தேடும் பணி மற்றும் எதிரிகள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.



இந்நிலையில், இன்று 28.10.2021-ம் தேதி சுமார் மதியம் 12-மணியளவில் தனிக்குழுவினர் அடர் வனப்பகுதிக்குள் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களை முட்புதரிலிருந்தது கண்டறிந்து கைப்பற்றினர்.

யானைத் தந்தம் கைப்பற்றப்பட்ட இப்பகுதி யானை இறந்த பகுதியிலிருந்து சுமார் 430-மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகு என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...