கோவை மாவட்டத்தில் தற்போது வரை 17-ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 9-ஆயிரம் பேருக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9-ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக தேசிய அடையாள அட்டை ஆதாவது யு.டி.ஐ.டி. அட்டை கடந்த 2017-ம் ஆண்டு முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த அட்டை பெற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் 2017-ஜனவரி முதல் செயல்படுத்தப்படுகிறது. அறிவித்து ஓராண்டுக்குப் பிறகு, அடையாள அட்டையை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி 21-வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தற்போது வரை 17-ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 9-ஆயிரம் பேருக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக தேசிய அடையாள அட்டை ஆதாவது யு.டி.ஐ.டி. அட்டை கடந்த 2017-ம் ஆண்டு முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த அட்டை பெற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் 2017-ஜனவரி முதல் செயல்படுத்தப்படுகிறது. அறிவித்து ஓராண்டுக்குப் பிறகு, அடையாள அட்டையை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி 21-வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தற்போது வரை 17-ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 9-ஆயிரம் பேருக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.