பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்யும் போது தண்ணீர் வீடுகளில் உள்ளேயும் வருகிறது என பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர்.
கோவை கரும்புக்கடை பகுதி பொதுமக்கள் சார்பில், கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கரும்புக்கடை பகுதிக்குட்பட்ட 86-மற்றும் 75-வது வார்டு பகுதிகளில் ராஜவாய்க்கால் முறையாகத் தூர் வாரப்படவில்லை.

பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதோடு மழை பெய்யும் போது தண்ணீர் வீடுகளில் உள்ளேயும் வருகிறது. உடனடியாக ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பீளமேடு பகுதியை சேர்ந்த மதிமுக பகுதி கழக செயலாளர் வெள்ளிங்கிரி என்பவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாநகராட்சிக்கு 55-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள சாக்கடைகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாட்டம் சரியாக இல்லாமல் மழை காலங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள்ளே செல்கிறது. மேலும் இப்பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. உடனடியாக மாநகராட்சி கமிஷனர் நேரடியாகத் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த முகாமில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை கரும்புக்கடை பகுதி பொதுமக்கள் சார்பில், கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கரும்புக்கடை பகுதிக்குட்பட்ட 86-மற்றும் 75-வது வார்டு பகுதிகளில் ராஜவாய்க்கால் முறையாகத் தூர் வாரப்படவில்லை.
பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதோடு மழை பெய்யும் போது தண்ணீர் வீடுகளில் உள்ளேயும் வருகிறது. உடனடியாக ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பீளமேடு பகுதியை சேர்ந்த மதிமுக பகுதி கழக செயலாளர் வெள்ளிங்கிரி என்பவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாநகராட்சிக்கு 55-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள சாக்கடைகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாட்டம் சரியாக இல்லாமல் மழை காலங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள்ளே செல்கிறது. மேலும் இப்பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. உடனடியாக மாநகராட்சி கமிஷனர் நேரடியாகத் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த முகாமில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.