சொக்கனூரில் கணினி சிட்டா திருத்த சிறப்பு முகாம்: மனுக்களுக்கு உடனடி தீர்வு.!!

கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் கணினி சிட்டா திருத்தச் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி கணினி சிட்டா திருத்தச் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.



துணை ஆட்சியர் குணசேகரன் தலைமையில், நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு கணினி சிட்டாவில் உள்ள திருத்தங்கள், பட்டா பெயர் மாற்றம் நத்தம் பட்டா மாறுதல், போன்ற மனுக்கள் அளித்தனர்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆவணங்களைச் சரி பார்த்து உடனடியாக தீர்வு காணப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

இதில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் வேல்முருகன், வட்ட துணை ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...