இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கயிறு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி: இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கயிறு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அரங்கில் தேசிய கயிறு வாரிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தென்னை நார் உற்பத்தியாளர்கள் தொழில் முனைவோர் மற்றும் கயிறு வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கயிறு வாரிய தலைவர் குப்பு ராமு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டில் 3,780-கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும், உள்நாட்டு வர்த்தகம் ரூ.12,000-கோடிக்கும் நடைபெற்றுள்ளது. 2025-ல் தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி 10,000-கோடிக்கும், உள்நாட்டு வர்த்தகம் 25,000-கோடிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதிதாக 2-லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். கயிறு பொருட்கள் இயற்கை சார்ந்த பொருட்கள். கயிற்றில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து தொழில் முனைவோர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜியோ டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் கயிறு பொருட்களைக் கொண்டு சாலை அமைத்தல் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கொள்கை அளவில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அகில இந்திய அளவில் சாலை அமைப்பதில் 7-சதவீதம் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் (கயிறு பொருட்களை) பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அளவில் கயிறு பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, என்றும் அவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அரங்கில் தேசிய கயிறு வாரிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தென்னை நார் உற்பத்தியாளர்கள் தொழில் முனைவோர் மற்றும் கயிறு வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கயிறு வாரிய தலைவர் குப்பு ராமு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டில் 3,780-கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும், உள்நாட்டு வர்த்தகம் ரூ.12,000-கோடிக்கும் நடைபெற்றுள்ளது. 2025-ல் தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி 10,000-கோடிக்கும், உள்நாட்டு வர்த்தகம் 25,000-கோடிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதிதாக 2-லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். கயிறு பொருட்கள் இயற்கை சார்ந்த பொருட்கள். கயிற்றில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து தொழில் முனைவோர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜியோ டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் கயிறு பொருட்களைக் கொண்டு சாலை அமைத்தல் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கொள்கை அளவில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அகில இந்திய அளவில் சாலை அமைப்பதில் 7-சதவீதம் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் (கயிறு பொருட்களை) பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அளவில் கயிறு பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, என்றும் அவர் தெரிவித்தார்.