கோவை வடவள்ளி பகுதியில் முதியவர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயராமன் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் முதியவர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்த வழக்கில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளி அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராவணன் நாயுடு என்பவரின் மகன் ஜெயராமன் (69). ஓய்வுபெற்ற இவர் தனது வங்கி கணக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராமனுக்கு செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. வங்கியின் மொபைல் போன் ஆப் முடக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டு உள்ள லிங்கில் உங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதை நம்பிய ஜெயராமன் எஸ்எம்எஸ் மூலம் வந்த லிங்கில் தனது விபரங்களைப் பதிவு செய்தார். சிறிது நேரத்திலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 20 ரூபாய் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்ட இருந்ததாக மெசேஜ் வந்தது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயராமன் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...