அமெரிக்காவில் நடைபெறும் ஓவிய கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கைகளின் புகைப்படங்கள் தேர்வு.!!

அமெரிக்காவில் நடைபெறும் ஓவிய கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கைகளின் புகைப்படங்கள் தேர்வாகி உள்ளதாகவும், இதில் பங்கு பெற தமிழக அரசு நிதி உதவி அளிக்கவும், கலை கூடம் அமைக்கவும் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் கோரிக்கை.



கோவை: திருநங்கை என்பதால் கலை கூடம் அமைக்க வீடு வாடகைக்குத் தர தயங்குவதாகவும் கூறியுள்ளனர். கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சகோதரி பவுண்டேஷன் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திருநங்கை கல்கி சுப்ரமணியம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-



2017-ம் ஆண்டு முதல் திருநங்கைகளின் கலை, திறமைகளை வெளிக்கொண்டு வர நிகழ்வுகள் நடத்தி வருவதாகவும், திருநங்கைகளிடம் இயற்கையாகவே கலை, படைப்பாற்றல் இருக்கின்றது என தெரிவித்த அவர், திருநங்கைகளின் ஆயிரக்கணக்கான படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம் திருநங்கைகளின் ஓவியங்களைக் கண்காட்சியில் வைக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளின் ஓவியங்களைத் தேர்வு செய்து இருப்பதாகவும், தமிழகத்திலிருந்து 7-திருநங்கைகள் கேரளாவிலிருந்து ஒரு திருநம்பி ஆகிய 8-பேரின் ஓவியங்கள் இந்த கண்காட்சிக்குத் தேர்வாகி இருப்பதாகவும், திருநங்கைகள் அங்கீகாரத்திற்குப் போராடி வரும் நிலையில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலை கழகத்தில் திருநங்கைகளின் ஓவியத்திற்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.



வரும் நவம்பர் முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 20-ம் தேதி வரை தெற்கு புளோரிடா பல்கலை கழகத்திலும், இணைய தளத்திலும் இந்த ஓவியங்கள் இடம் பெற இருப்பதாகவும், ஒரு வாரத்தில் புகைப்படங்களை அங்கு அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருநங்கைகளின் கலை படைப்பாற்றலை மத்திய மாநில அரசுகள் கவனித்து ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இதற்கு இந்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் எனவும், தமிழக அரசும் நிதி உதவி அளிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பொள்ளாச்சியில் இருக்கும் திருநங்கைகளுக்குக் கலைக்கூடம் அமைக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் எனவும், திருநங்கைகளுடன் திருநம்பிகளையும் அரவணைக்கத் துவங்கி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு திறமைகள் வளர்க்கத் தேவையான ஊக்கம் அளிக்க வேண்டும் எனவும், பொள்ளாச்சியில் தென்னை தொடர்பான அழகு சாதனங்கள் உருவாக்கும் பயிற்சியினை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தார்.



45-நாடுகள் சேர்ந்த திருநங்கைகளின் ஓவியங்கள் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலையில் கண்காட்சிக்கு வைக்கப்பட இருப்பதாகவும் கல்கி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...