கோவையில் கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்..!

கரடியிடம் சிக்கிக் கொண்ட ராமராஜன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள கூச்சலிட்ட போது சத்தம் கேட்டு ஓடி வந்த பப்பி, தனது எஜமானரை காப்பாற்றியது.


கோவை: கோவையில் மூர்க்கமாக தாக்கிய கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை வளர்ப்பு நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்த குஞ்சப்பனை என்னும் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமராஜ், மனைவி மற்றும் பெற்றோருடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பப்பி என்ற நாட்டு நாயொன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், ராமராஜன் விவசாய பணியை மேற்கொண்டிருந்த போது, வனப் பகுதியில் இருந்து வந்த கரடியொன்று அவரை தாக்க துவங்கியது. இதில் தடுமாறி கீழே விழுந்த ராமராஜனை மூர்க்கத்தனமாக நகத்தால் கீறியபடி கழுத்துப் பகுதியை கடித்து குதற முயன்றது.

கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்ட ராமராஜன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடினார். அப்போது, சத்தம் கேட்டு ஓடி வந்த பப்பி, தனது எஜமானரை காப்பாற்றும் நோக்கில் கரடிக்கு மிக அருகில் சென்று விடாமல் குரைக்க துவங்கியதோடு ஒரு கட்டத்தில் கரடியை கோபத்துடன் கடிக்க துவங்கியது.

நாயின் இச்செயலால் அச்சமடைந்த கரடி, வேறு வழியின்றி ராமராஜனை விட்டு விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது.



இதற்குள் நாயின் தொடர் சத்தத்தை கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ள தோட்டத்தினர் விரைந்து வந்து காயமடைத்த ராமராஜனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

கரடி கடித்ததில் காயமடைந்த ராமராஜனுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த நிலையில், பப்பி இல்லை என்றால் ராமராஜன் இறந்திருப்பார் என அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...