கோவையில் போலீஸ் குடியிருப்புக்குள் துணிகரம்: 2-போலீசார் வீடுகளின் நகை, பணம் திருட்டு.!!

கோவையில் போலீஸ் குடியிருப்பில் புகுந்த மர்ம நபர்கள் 2-போலீசார் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் போலீஸ் குடியிருப்பில் புகுந்த மர்ம நபர்கள் 2-போலீசார் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் போலீஸ் குடியிருப்பில் கொள்ளையர்கள் புகுந்து 2-போலீசார் வீடுகளில் நகை பணம் கொள்ளை அடித்துச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நகீனா. இவர் கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்குக் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள R 3-ப்ளாக்கில் குடியிருந்து வருகிறார்.

இவர் கடந்த 22-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்குச் சென்றார். இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோ திறந்து கிடந்தது.

அதிலிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், ஒரு லேப்டாப் ஆகியவற்றைக் காணவில்லை. மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நகீனா ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இதே போல அதே போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு அத்திக்கடவு முகாமில் உள்ள பயிற்சி மையத்திற்குப் பயிற்சிக்குச் சென்றுவிட்டார்.

பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 1.5-பவுன் தங்கச்செயின், 4-கிராம் மோதிரம், 2-பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் ரொக்கம் ரூபாய் 4000-ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, மணிகண்டன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் சமீபத்தில் நடந்த மூன்றாவது கொள்ளைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு மிகுந்த போலீஸ் குடியிருப்பில் நடைபெற்ற இந்த சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...