கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தைக் கண்டித்து இந்து முன்னனியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னனியினர் கண்டன ஆர்ப்பாடம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாகக் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அலகு குத்தி ஆண்டி வேடமணிந்து குழந்தைகளுக்குக் கடவுள் மற்றும் பாரத மாதா வேடமணிந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுய மாநில செயலாளர் கிஷோர் கூறுகையில், தமிழக அரசு தொடர்ந்து இந்து விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தார். பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதால் தமிழக அரசின் இந்தத் திட்டத்தில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
கோவில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டுமென்று இந்துமுன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில் கோவிலில் உள்ள தங்க நகைகளை எடுத்து உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்துக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. எனவே இந்த திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு கால பூஜை கூட நடைபெறாத கோவில்கள் பல உள்ளதாகவும் அதனைச் சரி செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் இந்த திட்டத்தைத் தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்துத்துவா அமைப்புகளை முதல்வர் சந்திக்க மறுப்பதாகவும் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் K.தசரதன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் S.சதிஷ் கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் ஆகியோர் உரையாற்றினர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, ஆனந்த், மகேஸ்வரன், ரமேஷ், மாவட்ட செயற்குழு ஜெயபாலன் மற்றும் மாவட்ட நகர கிளை பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.