லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்... கோவை போலீஸ் கமிஷனர் தலைமையில் 'ஊழல் ஒழிப்பு உறுதிமொழி'.!!

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் முன்னிலையில் அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் முன்னிலையில் அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது, அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவையுடன் ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.



நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்பொழுதும் உயர்ந்த நோக்குடன் ஊழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கண்ணியத்துடன், ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி கோபாலபுரம் பகுதியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் தீபக் எம் தாமோர், துணை ஆணையர் உமா முன்னிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களும் இன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அனைத்து செயல்களிலும் நேர்மையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வுகளை உரிய அதிகார மையத்திற்குத் தெரியப்படுத்துவேன் என்று நான் மனமார உறுதி அளிக்கிறேன் என்று அனைத்து பணியாளர்களும் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...