தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5-சதவீத உள் இடஒதுக்கீடு வேண்டி திருப்பூரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5-சதவீத உள் இடஒதுக்கீடு வேண்டி திருப்பூரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடிசை மாற்று வாரியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை இலவசமாக வழங்க வேண்டும். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5-சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.