கோவை கிணத்துக்கடவில் நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம் - தேசிய செயலாளர் ஶ்ரீவல்ல பிரசாத் பங்கேற்பு..!

மேலும், நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டத்தில் தேசிய செயலாளர் ஶ்ரீவல்ல பிரசாத் பங்கேற்றார்.

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில், நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வித்யாசாகர் வரவேற்றுப் பேசினார்.



செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் சித்திக், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபாலன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கவிதா, கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் சிவராஜ், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், நகர துணைத் தலைவர் ஜெகதீஷ், நகர செயலாளர் தம்புராஜ், தேவலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...