கோவை மாநகராட்சியின் சமூக வலைதளத்தில், மாநகராட்சி சார்பாக விதிக்கப்படும் வரிகள் தொடர்பான வினா- விடை போட்டி போல் கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் பங்குபெறும் மக்கள் சரியான பதிலை தேர்தெடுத்து தெரிவிக்கலாம்.
கோவை: கோவை மாநகராட்சி சார்பாக சமூக வலைதளத்தில் முனிசபல் பிரீமியர் லீக் துவங்கப்பட்டுள்ளது
கோவை மாநகராட்சி சார்பாக அதன் திட்டங்கள் குறித்தும் கொரோனா, டெங்கு உள்ளிட்ட தொற்றுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, கோவை மாநகர மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரபலமான சினிமா காட்சிகள், வசனங்கள் மூலம் மீம்ஸ் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், மாணவ மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இதனிடையே, கோவை மாநகராட்சி சார்பாக தற்போது சமூக வலைதளத்தில் முனிசபல் பிரீமியர் லீக் துவக்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாநகராட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில்,மாநகராட்சி சார்பாக விதிக்கப்படும் வரிகள் தொடர்பான வினா- விடை போட்டி போல் கேள்விகள் கேட்கப்படும். அதற்கான, பல பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில், சரியான பதிலை, போட்டியில் பங்குபெறும் மக்கள் தேர்தெடுத்து தெரிவிக்கலாம்.
முதல்கட்டமாக, மாநகராட்சி சார்பாக சொத்துவரி தொடர்பான விழிப்புணர்வு கேள்வி கேட்கப்பட்டு மக்களிடம் பதில்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்களுக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்துவிழிப்புணர்வு கிடைக்கும். கோவை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி சார்பாக அதன் திட்டங்கள் குறித்தும் கொரோனா, டெங்கு உள்ளிட்ட தொற்றுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, கோவை மாநகர மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரபலமான சினிமா காட்சிகள், வசனங்கள் மூலம் மீம்ஸ் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், மாணவ மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இதனிடையே, கோவை மாநகராட்சி சார்பாக தற்போது சமூக வலைதளத்தில் முனிசபல் பிரீமியர் லீக் துவக்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாநகராட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில்,மாநகராட்சி சார்பாக விதிக்கப்படும் வரிகள் தொடர்பான வினா- விடை போட்டி போல் கேள்விகள் கேட்கப்படும். அதற்கான, பல பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில், சரியான பதிலை, போட்டியில் பங்குபெறும் மக்கள் தேர்தெடுத்து தெரிவிக்கலாம்.
முதல்கட்டமாக, மாநகராட்சி சார்பாக சொத்துவரி தொடர்பான விழிப்புணர்வு கேள்வி கேட்கப்பட்டு மக்களிடம் பதில்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்களுக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்துவிழிப்புணர்வு கிடைக்கும். கோவை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.