பொள்ளாச்சியில் மழையின் காரணமாக சாலை ஓரங்களில் வெங்காயத்தை கொட்டிய வியாபாரிகள்.!!

மழையால் நாசமான அழுகிய வெங்காயம் மார்க்கெட்டின் ரோட்டோரம் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டதால் வியாபாரிகளிடையே வேதனையை ஏற்படுத்தியது.


கோவை: மழையால் நாசமான வெங்காயத்தைக் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காய மார்க்கெட்டின் ரோட்டோரம் நேற்று, மூட்டை, மூட்டையாக அழுகிய வெங்காயம் கொட்டப்பட்டது.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வெங்காய வரத்து உள்ளது.

அதில் பெரும்பாலும், கேரள மாநில பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகமானது. இதனால் சுமார் மூன்று வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20ஆக சரிந்தது.

போதிய விலையில்லையென்று விவசாயிகள் வேதனையடைந்தனர். அதுபோல், தமிழக பகுதியிலிருந்து மட்டுமின்றி மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிகரிக்கத் துவங்கியது.

இதனால், பல்லாரி ஒருகிலோ அதிகபட்சமாக ரூ.25-க்கே விற்பனையானது. ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழையால் வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயங்கள், மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, கன மழை காரணமாக வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் உள்ளிட்டவை அழுகிய நிலை ஏற்பட்டது.

இதனால், தொழிலாளர்கள் மூலம் அதனை தரம் பிரித்து விற்பனைக்காக அனுப்பும் பணி நடைபெற்றது. இருப்பினும், மழையால் நாசமான வெங்காயத்தைக் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காய மார்க்கெட்டின் வெளிப்பகுதி ரோட்டோரம் நேற்று, மூட்டை, மூட்டையாக அழுகிய வெங்காயம் கொட்டப்பட்டது, வியாபாரிகளிடையே வேதனையை ஏற்படுத்தியது.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...