பரவும் டாஸ்மாக் எதிர்ப்பு... மாவட்ட ஆட்சியரிடம் தாராபுரம் பெண்கள் மனு.!!

டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாராபுரம் பெண்கள் மனு அளித்தனர்.



திருப்பூர்: டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாராபுரம் பெண்கள் மனு அளித்தனர்.

தாராபுரம் வட்டம் பொட்டிகாம்பாளையம் பகுதியில், 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



முக்கியமான சந்திப்பு என்பதால் அந்த வழியில் பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர் வரை கடந்து செல்கின்றனர். மேலும் அரசு நியாய விலை கடையும் அருகாமையில் உள்ளதால் உடனடியாக அந்த டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி விட வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதற்கு முன்பு இரண்டு முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



தற்போது மூன்றாவது முறையாக மனு கொடுத்துள்ளோம். உடனடியாக மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...