கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ஏசுகிறிஸ்து வாழ்க்கை வரலாறு குறித்து அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் நாடகம் நடத்தினர்


கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதில், ஏசு பிறப்பு உள்ளிட்ட அவரது வாழ்க்கை குறித்து நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் தத்ரூபமான நாடகம் அங்கிருந்தோரை வெகுவாக கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் ஷேர்லி தாமஸ் வரவேற்புரையாற்றினார். அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் விழா என்பது சாதிமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படுகின்ற விழாவாக அமைகின்றது. அறியாமை, மூடநம்பிக்கை, பேராசை, வெறுப்புணர்ச்சி போன்றவைகளை அகற்றுவதற்காக தெய்வ அவதாரமாகிய ஏசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார் என்றும், உலகம் முழுவதும் ஆன்மீக ஒளியை பரப்புவதற்காக கிறிஸ்துமஸ் விழா இசை நிகழ்ச்சிகளுடன் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, கோவை இன்டச் ஃபெல்லோசிப் இன்டர்நேசனல் முதன்மை பாஸ்டர் எம்.அருமைநாயகம் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்களின் ஏசுபிறப்பு நாடகம் தத்ரூபமாகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார். நிறைவாக பேராசிரியர் முனைவர் வசந்தகல்யாணி நன்றியுரை வழங்கினார்.





Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...