பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய பெண்ணின் குடும்பத்தார்..!

காரமடையில் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: காரமடையில் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் காரமடையில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காரமடை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் பங்க்கில் மேலாளராக செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே பெட்ரோல் பங்கில் பணிபுரியக்கூடிய பெண் ஊழியர் ஒருவருக்கு செல்வகுமார் தொலைபேசி வாயிலாக ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தனது வீட்டிற்கு ஒரு நாள் வரும் படியும் அந்த பெண்ணை அழைத்ததாகவும், மேலாளரின் இந்த ஆபாச பேச்சு குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து, பெட்ரோல் பங்க் சென்று மேலாளரிடம் பாலியல் தொந்தரவு குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியதோடு மேலாளரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பணிபுரிந்து வந்த ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...