திருப்பூரில் அம்மிக்கல் ஆட்டுக்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டம்..!

கூட்டமாக மனு அளிக்க காவல்துறை அனுமதிக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அம்மிக்கல் ஆட்டுக்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல் குவாரிகளில் இருந்து கல் எடுத்து அதன்மூலம் அம்மிக்கல் ஆட்டுக்கல் இஞ்சி பூண்டு அரைக்கும் கல் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து வருடகாலமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாசு ஏற்படுத்தும் வகையிலான கல்குவாரிகள் அடைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஊத்துக்குளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்களது சொந்த நிலத்தில் உள்ள கல் குவாரிகளில் மாசு ஏற்படுத்தாத வகையில் பாறைகளில் தண்ணீர் ஊற்றி உலர்த்தி மாசு ஏற்படுத்தாத வகையில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் இருந்து அம்மிக்கல் ஆட்டுக்கல் மற்றும் இஞ்சி-பூண்டு அரைக்கும் கல் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பான முறையில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் இயங்க அனுமதி பெற்றுத்தர வேண்டும். அதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மனு அளிக்க வந்தனர்.



இதனிடையே, கூட்டமாக மனு அளிக்க காவல்துறை அனுமதிக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் தொழிலாளர்களை மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதித்தனர்.

அப்போது, மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...