கோவையில் நகை, பணத்தை பிடுங்கிக் கொண்டு மகள்கள் வீட்டைவிட்டுத் துரத்தியதாக ஆம்புலன்சில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி புகார்..!

தனது பணம், நகையை மீட்டு தருவதோடு, துன்புறுத்தும் மகள்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


கோவை: கோவையில் நகை மற்றும் பணத்தை பிடுங்கிக் கொண்டு தனது மகள் துரத்தி விட்டதாக மூதாட்டி ஒருவர் ஆம்புலன்சில் வந்து மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் சரோஜினி (70).



உடல் நலம் குன்றிய இவர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது;

எனது கணவருக்கு சொந்தமான வீட்டை எனது மூத்த மகள் பாக்கியலட்சுமி மற்றும் இளைய மகன் மோகனா ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டு, என்னிடமிருந்து 17 பவுன் நகை மற்றும் 5 லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தையும் பிடிங்கிக் கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.



நான் தற்போது எனது இளைய மகள் ராஜலட்சுமி வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தேன். அதன்படி எனது மகள்கள் இருவரும் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் தர வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் அதையும் கொடுக்காமல், எனது வயது முப்பை கருத்தில் கொள்ளாமல் என்னை துன்புறுத்தி வருகின்றனர். எனவே, எனது பணம் நகையை மீட்டு தருவதோடு, என்னைத் துன்புறுத்தும் மகள்களிடம் இருந்து தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...