கோவையில் ரூ.1½ கோடி நகை கொள்ளை போன வழக்கில் பழைய குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை..!

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளைப் பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்- இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ரூ.1½ கோடி நகை கொள்ளை போன வழக்கில் பழைய குற்றவாளிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை துடியலூர் அடுத்த கவுண்டர் மில் அதிர்ஷ்ட லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (52). இவரது வீட்டில் இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ஐஸ்கிரீம் டீலர் ஆன இவர் கடந்த 22-ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் பழைய குற்றவாளிகள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த கொள்ளை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து அதை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும், கதவுகளை உடைத்து திருடிய வழக்கில் கைதாகி விடுதலையான பழைய குற்றவாளிகளை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோன்று திருட்டு வழக்கில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையானவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சம்பவம் நடந்த அன்று அவர்கள் எங்கு இருந்தனர் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று அருகில் உள்ள கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...