கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ 2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரை அடுத்த வடமதுரை கண்ணன் நகரை சேர்ந்த கரிகாலன்(60) ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர். இவரது மனைவி ராணி, மகன் மகளுடன் சேலத்தில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவிற்கு கடந்த 23ம் தேதி சென்று விட்டு நேற்று இரவு 11 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் வைத்து இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் பணம் திருட்டுப் போனது தெரியவந்தது.
பின்னர், இது குறித்து துடியலூர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்கள் முன்பு ஜி.என் பகுதியில் ஐஸ் கிரீம் டீலர் சீனிவாசன் என்பவர் வீட்டில் 1 கோடி மதிப்பில் வைர நகைகள் 50 பவுண் நகை திருட்டு போனது. மேலும், நேற்று முன்தினம் வெள்ளக்கிணறு பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தினமும் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறும் போது, பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், தங்க நகைகளை வீட்டில் வைத்து செல்லக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை துடியலூரை அடுத்த வடமதுரை கண்ணன் நகரை சேர்ந்த கரிகாலன்(60) ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர். இவரது மனைவி ராணி, மகன் மகளுடன் சேலத்தில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவிற்கு கடந்த 23ம் தேதி சென்று விட்டு நேற்று இரவு 11 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் வைத்து இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் பணம் திருட்டுப் போனது தெரியவந்தது.
பின்னர், இது குறித்து துடியலூர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்கள் முன்பு ஜி.என் பகுதியில் ஐஸ் கிரீம் டீலர் சீனிவாசன் என்பவர் வீட்டில் 1 கோடி மதிப்பில் வைர நகைகள் 50 பவுண் நகை திருட்டு போனது. மேலும், நேற்று முன்தினம் வெள்ளக்கிணறு பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தினமும் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறும் போது, பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், தங்க நகைகளை வீட்டில் வைத்து செல்லக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.