கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகளில் அலட்சியம் - கர்ப்பிணிகள், முதியவர்கள் பயணிக்க அச்சம்..!

மேலும், இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் குழிகளுக்குள் வாகனங்கள் சிக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கி.மீ. நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் உள்ளது.



அதே போல், மேம்பால பணிகளும் அலட்சியமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் உள்ளது, போதுமான அளவு தடுப்புகள் அமைக்கப்படவில்லை. மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

'பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து அலட்சியமாக நடைபெற்று வருகிறது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதி காற்று பறக்கிறது. மழை நேரங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. உடனடியாக சர்வீஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல், ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாமல் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்' என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...