கோவையில் இறந்த நிலையில் 30 வயதான ஆண் யானை உடல் மீட்பு - தந்தங்கள் திருட்டு குறித்து வனத்துறை விசாரணை..!

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் யானை உடல் மீட்கப்பட்ட நிலையில், தந்தங்களை திருடிய நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளை பதி பிரிவு அருகே கரியன் படுகை சரக பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, இறந்த யானையின் உடலினை காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு இழுத்துச் சென்ற நிலையில் தற்போது இறந்த யானையின் எலும்புகள் மட்டும் அவ்விடத்தில் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டம் பூண்டி அருகே கரியன் படுகை வனச்சரகப் பகுதியில் இறந்த நிலையில் 30 வயதான ஆண் யானை உடல் மீட்கப்பட்டுள்ளது.

யானையின் இரு தந்தங்கள் திருடப்பட்டுள்ளது. தந்தங்களை திருடிய நபர்கள் குறித்து கோவை வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...