இந்திய விமானப்படை கல்லூரியில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை தங்களிடம் ஒப்படைக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் விமானப்படை அனுமதியுடன் விசாரித்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை: இந்திய விமானப்படை கல்லூரியில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை தங்களிடம் ஒப்படைக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் விமானப்படை அனுமதியுடன் விசாரித்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் கடந்த மாதம் பெண் அதிகாரி ஒருவர் சக அதிகாரி அமிதேஷ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தொடர்ந்த வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில் கைது செய்யப்பட்ட அமிதேஷை விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி கைதான அமித்தேஷை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோவை காவல்துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி நாகராஜிடம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையை 21-ம் தேதி நடைபெறும் என நீதிபதி கூறியதை அடுத்து 23-ம் தேதி மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு ஒத்தி வைத்தார். இதனையடுத்து இன்று விமானப்படை அதிகாரிகள் அனுமதியுடன் அமித்தேஷை விசாரித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

கோவை சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் கடந்த மாதம் பெண் அதிகாரி ஒருவர் சக அதிகாரி அமிதேஷ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தொடர்ந்த வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில் கைது செய்யப்பட்ட அமிதேஷை விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி கைதான அமித்தேஷை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோவை காவல்துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி நாகராஜிடம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையை 21-ம் தேதி நடைபெறும் என நீதிபதி கூறியதை அடுத்து 23-ம் தேதி மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு ஒத்தி வைத்தார். இதனையடுத்து இன்று விமானப்படை அதிகாரிகள் அனுமதியுடன் அமித்தேஷை விசாரித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.