கோவை விமான நிலையத்தில் தினமும் 20 விமானங்கள் இயக்கம்: சகஜ நிலை திரும்புவதால் பயணிகள் மகிழ்ச்சி..!

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 என அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவை  வழங்கப்படுகிறது.


கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால், கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள 7 மாவட்ட மக்கள், குறிப்பாக தொழில் ரீதியாக விமான பயணம் மேற்கொள்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். 

கோவை விமான நிலையத்தில், கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன், தினமும் 33 முதல் 35 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், நோய்தொற்று பரவலுக்கு பின், மே மாதம் முதல் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. 

ஜூன் மாதத்திற்கு பிறகு, அரசு அறிவித்த தளர்வுகள், அதிக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதுஉள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கோவையில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. அதன்படி, இந்த மாதம் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 23 வரை தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து பேசிய கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர், செந்தில் வளவன், " கோவை சர்வதேச விமான நிலையத்தில்கொரோனா நோய் தொற்று தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சீரான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

தற்சமயம், தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 என அதிகரித்துள்ளது. கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவைவழங்கப்படுகிறது. 

இது தவிர கோவையிலிருந்து பெங்களூர் வழியாக அகமதாபாத், மற்றும் சென்னை வழியாக பரோடா, கவுஹாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நாட்களில் விமானங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...