வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.426 சம்பளம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க முதலமை‌ச்ச‌ருக்கு எல்பி எஃப் தொழிற்சங்க தலைவர் கோரிக்கை..!

தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான 425.40 ரூபாயை தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றது.


கோவை: வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 426 சம்பளம் வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்பி எஃப் தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் முதலமை‌ச்ச‌ருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதமே முடிவுற்ற நிலையில் புதிய ஒப்பந்தம் எட்டப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 425.40 அறிவித்துள்ளது. இந்நிலையில் தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் இதை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றது.

இதனைத்தொடர்ந்து, வால்பாறையில் உள்ள எல்பிஎஃப் தொழிற்சங்க தலைவரும், முன்னாள் நகர மன்றத் தலைவருமான கோழிக்கடை கணேசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.

இந்நிகழ்வில், வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் மற்றும் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோழிக்கடை கணேசன், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வால்பாறை GKM மகுடீஸ்வரன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வடை கடை குட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...