ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியான வழக்கில் அவரது அண்ணனிடம் போலீசார் விசாரணை..!

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் துவங்கி உள்ளது. ஜெயலலிதாவின் கார் டிரைவரின் அண்ணன் தனபாலிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


நீலகிரி: கொடநாடு கொலை வழக்கில் அடுத்தடுத்து தற்கொலை மற்றும் விபத்துக்கள் அரங்கேறி வந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் டிரைவர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக அவரது அண்ணன் தனபாலை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ் (36). இவர், சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா, சித்திரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். 2009ல், போயஸ் கார்டனில் டிரைவராக வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் இறப்பைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 17ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ், ஆத்துாரில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு ஏப்ரல் 28ம் தேதி வந்தபோது, ஆத்துார் புறவழிச்சாலை பகுதியில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். ஆத்துார் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், விபத்தில் இறந்த டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் (43), 'இது விபத்து இல்லை. வேண்டுமென்றே வாகனத்தால் இடித்து கொல்லப்பட்டார்' என, புகார் தெரிவித்து இருந்தார். ஆனால், போலீசார் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் துவங்கி உள்ளது. இதையடுத்து, தனபாலிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட போலீசார் நேற்று தனபாலின் ஊரான சித்திரபாளையம் வந்தனர். தனபாலை விசாரணைக்காக ஊட்டிக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...