கோவையில் தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் புதிய செயலி விரைவில் அறிமுகம்..!

கோவை மாவட்ட தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.


கோவை: கோவை மாவட்ட தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் புதிய செயலியை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வளர்ச்சி பணிகளை கண்காணிக்க அமைச்சர்களை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நியமித்தார். அதன்படி கோவை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில், இன்று கோவை வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது:-

கோவையில் உள்ள 12 ஊராட்சிகளில் 1200 கிராமங்கள் உள்ளன. 332 கிராமங்களில் 3 நாட்களுக்குள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் மீதம் உள்ள கிராமங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



கோவை மாநகராட்சியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் அது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 5 ஆயிரம் தெரு விளக்குகள் தற்போது எரியாமல் உள்ளது. வரும் ஒரு வாரத்திற்குள் ஊரக பகுதி மற்றும் மாநகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் சரி செய்யப்படும் என்று கூறினார்.

அதே போல் கோவை மாவட்டத்தின் தொழில்துறை மற்றும் வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையில் அனுமதியளிக்க புதிய செயலியை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதனை தமிழக முதல்வர் அறிமுகம் செய்து வைப்பார் என்றார்.

அதேபோல, மக்கள் சபை நிகழ்ச்சிகள் மூலம் நான் உட்பட உயர் அதிகாரிகள் வார்டு வாரிய நேரில் சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற உள்ளோம். இந்த மனுக்களை பெற்ற 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார். கனிமவள கொள்ளையை தடுக்க முழுமையான விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...