இதே போல, அதே பகுதியில் ஆறு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் தொழிலதிபர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தினந்தோறும் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் உள்ளனர்.
கோவை துடியலூர் அடுத்த கவுண்டர் மில் அதிர்ஷ்ட லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (52). இவரது வீட்டில் இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ஐஸ்கிரீம் டீலர் ஆன இவர் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் துடியலூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போல, அதே பகுதியில் ஆறு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சீனிவாசன் குடியிருந்த வீடு வில்லா வடிவிலான தனி சொகுசு வீடு ஆகும். அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் தனித்தனி வீடுகள் ஆக உள்ளது. இந்த வீடுகளைக் குறிவைத்துக் கொண்டு கொள்ளை அடித்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவையில் தினந்தோறும் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் உள்ளனர்.
கோவை துடியலூர் அடுத்த கவுண்டர் மில் அதிர்ஷ்ட லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (52). இவரது வீட்டில் இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ஐஸ்கிரீம் டீலர் ஆன இவர் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் துடியலூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போல, அதே பகுதியில் ஆறு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சீனிவாசன் குடியிருந்த வீடு வில்லா வடிவிலான தனி சொகுசு வீடு ஆகும். அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் தனித்தனி வீடுகள் ஆக உள்ளது. இந்த வீடுகளைக் குறிவைத்துக் கொண்டு கொள்ளை அடித்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.