இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
கோவை: வால்பாறை வட்டார பகுதியில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் ஆய்வு செய்து வருகிறார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி, வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டங்கள், வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முகாமில், காலை 7 மணி முதல் இரவு 5 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கொரொனா தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், வால்பாறையில் உள்ள சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய வால்பாறை தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி, வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டங்கள், வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முகாமில், காலை 7 மணி முதல் இரவு 5 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கொரொனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையில் உள்ள சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய வால்பாறை தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.