வால்பாறையில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் நேரில் ஆய்வு..!

இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: வால்பாறை வட்டார பகுதியில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் ஆய்வு செய்து வருகிறார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி, வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டங்கள், வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முகாமில், காலை 7 மணி முதல் இரவு 5 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கொரொனா தடுப்பூசி போடப்படுகிறது.



இந்நிலையில், வால்பாறையில் உள்ள சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய வால்பாறை தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...