உஷார் மக்களே... உஷார்... சரவணம்பட்டியில் பூட்டிய வீடுகளை குறிவைக்கும் கொள்ளை கும்பல்.!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் 2-வீடுகளை உடைத்து 30-பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் 2-வீடுகளை உடைத்து 30-பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை பி.என். புதூர் அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் ஆனந்த சபீசன் வயது 33, இவர் கீரணத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 27-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்துக்குச் சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பின்னர் அறையிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த ஆரம், செயின், வளையல், கம்மல் - மோதிரம், தங்க நாணயம் உட்பட 16-பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

வீட்டிற்குத் திரும்பிய ஆனந்த் சபீசன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல விநாயக நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் 62, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு மனைவியுடன் பெங்களூருக்குச் சென்றார்.

நேற்று வீடு திரும்பினார் அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்தது. பீரோவிலிருந்த 14-பவுன் நகை ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து ஒரே பகுதியில் கொள்ளை நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...