உஷார் மக்களே... உஷார்... சரவணம்பட்டியில் பூட்டிய வீடுகளை குறிவைக்கும் கொள்ளை கும்பல்.!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் 2-வீடுகளை உடைத்து 30-பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் 2-வீடுகளை உடைத்து 30-பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை பி.என். புதூர் அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் ஆனந்த சபீசன் வயது 33, இவர் கீரணத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 27-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்துக்குச் சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பின்னர் அறையிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த ஆரம், செயின், வளையல், கம்மல் - மோதிரம், தங்க நாணயம் உட்பட 16-பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

வீட்டிற்குத் திரும்பிய ஆனந்த் சபீசன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல விநாயக நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் 62, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு மனைவியுடன் பெங்களூருக்குச் சென்றார்.

நேற்று வீடு திரும்பினார் அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்தது. பீரோவிலிருந்த 14-பவுன் நகை ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து ஒரே பகுதியில் கொள்ளை நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...