நீங்க இன்னும் தடுப்பூசி போடவில்லையா? அப்போ நாளை உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு.!!

சனிக்கிழமை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து, நல்லட்டிபாளையம் ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர்கள் சார்பில் சிறப்பு வீடியோ வெளியீடு.


கோவை: சனிக்கிழமை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து, நல்லட்டிபாளையம் ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர்கள் சார்பில் சிறப்பு வீடியோ வெளியீடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 100-சதவிகித தடுப்பு ஊசி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தொடர் முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சைவப் பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா கொரோனா தடுப்பு முகாமில் தடுப்பூசி போட வருவதில்லை என கூறப்பட்டது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்த தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. இதையடுத்து வருகிற சனிக்கிழமை 23-ம் தேதி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.



இந்த நிலையில் சனிக்கிழமையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி குறித்துச் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



அதில் செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி இன்னும் போடவில்லையா என்றும், சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...