கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள் ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.
கோவையில் மாவட்ட ஊராட்சி துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கெடுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.
இந்த தேர்தலில் அதிமுக 9 கவுன்சிலர்களும், திமுக 6 கவுன்சிலர்களும், பாரதிய ஜனதா கட்சியில் 2 கவுன்சிலர்களும் உள்ளார்கள். அதிமுகவை சார்ந்த சாந்திமதி, தோப்பு அசோகன் மாவட்ட ஊராட்சி தலைவராக உள்ளார். அதிமுக மாவட்ட ஊராட்சி துணை தலைவராக இருந்த அமுல் கந்தசாமி ராஜினாமா செய்ததை அடுத்து. இப்பொழுது அந்த பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் அதிமுக சார்பாக ராதாமணியும், திமுக சார்பாக ஆனந்தனும் மாவட்ட ஊராட்சி துணை தலைவருகான பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
அப்போது, தேர்தல் சுதந்திரமாக நடக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என திமுக கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். அதிமுக வழக்கறிஞர்கள் தேர்தல் நடைபெறும் அறையின் அருகில் அமர்ந்து கொண்டு சுதந்திரமாக தேர்தல் நடக்கும் சூழலை கெடுப்பதாக திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டி, தேர்தல் நடைபெறும் அறையில் இருந்து திமுக கவுன்சிலர்கள் 6 பேரும் வெளியேறினர்.
இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.