முத்து மாரியம்மன் கோவிலை அகற்ற வேண்டும் என்று பாரத் நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் மற்றும் அவரின் குடும்பத்தார் இடையூறு செய்வதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவை: கோவை போத்தனுர் அருகே பொதுமக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் முத்து மாரியம்மன் கோவிலை பாதுகாத்திட வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது,
கோவை போத்தனுர் பகுதியில் உள்ள பாரத் நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் இன்னும் சில இடங்களில் இந்து மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கோவில் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி பொதுமக்கள் பயன்படுத்தாத இடத்தை தேர்வு செய்து, அன்றைய குறிச்சி நகராட்சி தலைவர் நாகராஜின் ஒப்புதலுடன் 25 வருடங்களுக்கு முன்பு முத்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது.
தொடர்ந்து 20 வருடங்களாக திருவிழாக்களும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும், இது தனிநபருக்கு சொந்தமான கோவில் கிடையாதென்றும் இந்த கோவில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாரத் நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் மற்றும் அவரின் குடும்பத்தார், அப்பகுதியைச் சேர்ந்த மக்களை சட்ட விரோதமாக கட்டாய மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுவதாகவும், மேலும் முத்து மாரியம்மன் கோவில் இதற்கு இடையூறாக இருப்பதால் அக்கோவிலை அகற்ற சட்ட விரோத நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுத்து மக்கள் தொடர்ந்து வழிபட வழிவகை செய்துதரவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது,
கோவை போத்தனுர் பகுதியில் உள்ள பாரத் நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் இன்னும் சில இடங்களில் இந்து மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கோவில் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி பொதுமக்கள் பயன்படுத்தாத இடத்தை தேர்வு செய்து, அன்றைய குறிச்சி நகராட்சி தலைவர் நாகராஜின் ஒப்புதலுடன் 25 வருடங்களுக்கு முன்பு முத்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது.
தொடர்ந்து 20 வருடங்களாக திருவிழாக்களும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும், இது தனிநபருக்கு சொந்தமான கோவில் கிடையாதென்றும் இந்த கோவில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாரத் நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் மற்றும் அவரின் குடும்பத்தார், அப்பகுதியைச் சேர்ந்த மக்களை சட்ட விரோதமாக கட்டாய மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுவதாகவும், மேலும் முத்து மாரியம்மன் கோவில் இதற்கு இடையூறாக இருப்பதால் அக்கோவிலை அகற்ற சட்ட விரோத நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுத்து மக்கள் தொடர்ந்து வழிபட வழிவகை செய்துதரவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.