சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அருள்பிரகாஷ் தனது உடல்நிலை சரியில்லை என போலீசாரிடம் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோவை: மோசடி வழக்கில் கைதான கோவை தங்கம் மருமகன் மருத்துவமனையில் திடீர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை சாய்பாபா காலனி கணபதியைச் லே-அவுட்டை சேர்ந்த அருண் பிரகாஷ். முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகனான இவர் ரியல் எஸ்டேட் ஓட்டல் உள்பட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார்.
இந்நிலையில், அருண் பிரகாஷ் தொழில் தொடங்குவதாக கூறி பீளமேடு சித்ரா சசி அவன்யூ பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவரிடம் ரூபாய் 7 கோடியும், அவரது தந்தையிடம் ரூபாய் 11/2 கோடியும் வாங்கியுள்ளார். ஆனால், தொழில் எதுவும் தொடங்காமல் இருந்து வந்தார்.
இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அதனை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சிந்துஜா மற்றும் அவரது தந்தை செங்குட்டுவன் ஆகியோர் தனித் தனியே போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில், சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 19ம் தேதி பிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அப்போது நீதிபதி அவரை திருப்பூர் அவினாசி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் அவிநாசி நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, சிறைக்கு அழைத்துச் செல்லக்கூடிய வழியில் அருள்பிரகாஷ் தனது உடல்நிலை சரியில்லை என பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் வாகனத்தை திருப்பி அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அங்கு சிறைக் கைதிகள் சிகிச்சை பெறக் கூடிய வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி கணபதியைச் லே-அவுட்டை சேர்ந்த அருண் பிரகாஷ். முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகனான இவர் ரியல் எஸ்டேட் ஓட்டல் உள்பட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார்.
இந்நிலையில், அருண் பிரகாஷ் தொழில் தொடங்குவதாக கூறி பீளமேடு சித்ரா சசி அவன்யூ பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவரிடம் ரூபாய் 7 கோடியும், அவரது தந்தையிடம் ரூபாய் 11/2 கோடியும் வாங்கியுள்ளார். ஆனால், தொழில் எதுவும் தொடங்காமல் இருந்து வந்தார்.
இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அதனை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சிந்துஜா மற்றும் அவரது தந்தை செங்குட்டுவன் ஆகியோர் தனித் தனியே போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில், சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 19ம் தேதி பிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அப்போது நீதிபதி அவரை திருப்பூர் அவினாசி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் அவிநாசி நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, சிறைக்கு அழைத்துச் செல்லக்கூடிய வழியில் அருள்பிரகாஷ் தனது உடல்நிலை சரியில்லை என பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் வாகனத்தை திருப்பி அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அங்கு சிறைக் கைதிகள் சிகிச்சை பெறக் கூடிய வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.