வால்பாறையில் மழை நீர் பேருந்துக்குள் வந்ததால் பயணிகள் குடை பிடித்து பயணம்.!!

வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகுவதால் அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பாடு வருகிறது. கூழாங்கல் ஆறு பகுதியில் பொது மக்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.



இதனால் பயணிகள் அதிக சிரமப்பட்டனர். வால்பாறை பகுதியில் வருடத்தில் அதிக நாட்கள் அதிக அளவு மழை பெய்யும் நிலை உள்ளது.



இதனால் இது போன்ற மழையில் ஒழுகும் நிலையில், உள்ள பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...